காதலியுடன் கதைத்ததை கண்ட காதலியின் தாயார்!! -பயத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி-

ஆசிரியர் - Editor II
காதலியுடன் கதைத்ததை கண்ட காதலியின் தாயார்!! -பயத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி-

காதலியிடம் பேசுவதை காதலியின் தாயார் பார்த்ததால் ஏற்ப்பட்ட பயம் காரணமாக மாடியில் இருந்து குதித்த மாணவர் பலியாகியுள்ளார்.

சேலம் கொல்லப்பட்டியில் உள்ள மதிய சட்டக் கல்லூரியில் உள்ளது. தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் ஹரிணி என்பவர் தனது தாய்-தங்கையுடன் கொல்லப்பட்டி பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இவர்கள் இருவரும் கரூரில் பாடசாலையில் பயின்ற போது 3  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனால் தங்களுடைய காதலை சட்டக் கல்லூரியிலும் தொடர்ந்துள்ளனர். 

இதனிடைய நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி அளவில் காதலி தங்கி இருந்த வீட்டுக்குச் சென்ற சஞ்சய் ஹரிணியுடன் மொட்டை மாடியில் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது தன்னுடைய மகள் வீட்டில் இல்லாததால் அவரை தேடி மொட்டை மாடிக்கு அவர்கள் தாயார் சுகந்தி வந்தபோது இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். அப்போது அங்கிருந்து தப்பிப்பதற்கு ஏதும் வழி இல்லாததால் செய்வது அறியாத தவித்த சஞ்சய் சுமார் 50 அடி உயரத்தில் இருந்த மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். 

அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சஞ்சய் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கன்னங்குறிச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு சஞ்சையின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

சஞ்சய் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு