காதலிக்கமாறுத்த பெண் மீது அவதூறு பரப்பிய நபர்!! -மனமுடைந்த பெண் மருத்துவர் தற்கொலை-

ஆசிரியர் - Editor II
காதலிக்கமாறுத்த பெண் மீது அவதூறு பரப்பிய நபர்!! -மனமுடைந்த பெண் மருத்துவர் தற்கொலை-

ந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தை சக மருத்துவரின் துன்புறுத்தலை தாங்க முடியாத பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாநிலத்தை சேர்ந்த பிரியங்ஷி திரிபாதி என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவருடன் பணிபுரியும் சக மருத்துவரான சுமித், பெண் மருத்துவரை தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்க வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிரியங்ஷியை சுமித் துன்புறுத்திய நிலையில் பெண் மருத்துவர் காதலை ஏற்கவில்லை.

இதோடு பிரியங்ஷியை புகைப்பிடிக்க வேண்டும், மது அருந்த வேண்டும் என சுமித் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சுமித்தின் பேச்சுக்கு பெண் மருத்துவர் செவி கொடுக்காததால் ஆத்திரத்தில், பெண்ணின் நடத்தையை பற்றி சுமித் அவதூறு பரப்பினார்.

இதனால் மனமுடைந்த பிரியங்ஷி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஜனவரி 25 ஆம் திகதி நடந்துள்ளது.

இது குறித்து பெண் மருத்துவரின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு