ஜோ பைடன் வீட்டில் மீண்டும் அதிரடி சோதனை

ஆசிரியர் - Editor II
ஜோ பைடன் வீட்டில் மீண்டும் அதிரடி சோதனை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இருப்பினும் அங்கு சோதனையில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை ஜனாதிபதி இருந்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும். 

இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் டேலாவேரில் உள்ள ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அங்கு ரகசிய ஆவணங்கள் இருக்கிறதா என்று தேடினர். இந்த சோதனையில் கடற்கரை இல்லத்தில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு