3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாரை சேர்ந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I
3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாரை சேர்ந்தவர்கள்..

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், 

மன்னாரைச் சேர்ந்த விக்டர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். கிருபானந்தம் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். 

இவருக்கு கடந்த மாதமே 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று விக்டர் ரொபின்சன் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். 

இவருக்கு ஆயுள்தண் டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் நேற்றிரவு விடுதலையாகினர்.

இதேநேரம் விடுதலை செய்யப்பட்ட மூன்றாவது நபரான கிளிநொச்சி யைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

கிளிநொச்சி மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் நேற்றிரவு விடுவிக்கப்படவில்லை. 

மேன்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றதும் விடுவிக்கப்படுவார் என்று அறிய வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு