16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு!! -பிரபல சாமியாருக்கு ஆயுள் தண்டனை-

ஆசிரியர் - Editor II
16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு!! -பிரபல சாமியாருக்கு ஆயுள் தண்டனை-

ஆசாராம் பாபு என்னும் 81 வயதான சாமியார் பெண் ஒருவரை உறவில் ஈடுபட வற்புறுத்தியதுடன், பெண் பக்தரை கைதியாக வைத்து இருந்ததுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இவர் 2001 மற்றும் 2006 க்கு இடையில் பெண்ணை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் 16 வயது பக்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபு ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட குரு ஆசாராம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், அப்போது அவருடைய பெற்றோர்கள் அறைக்கு வெளியே ஜோடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

சிறுமியை குணப்படுத்தியதாக பெற்றோரை நம்ப வைத்த பாபு, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு, யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு