வடமாகாண பிரதி பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் நியமனம்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண பிரதி பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் நியமனம்!

வடமாகாண பிரதி பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். 

வடமாகாண மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி நெறி பிரதிப் பிரதம செயலாளராக வடமாகாண ஆளுநரால் நியமன கடிதம் வழங்கப்பட்டது.

திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் யாழ்.பிரதேச செயலாளராக, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக, இந்து கலாச்சார அமைச்சின் செயலாளராக 

பின்னர் பொதுநிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சில் சிரேஷ்ட நிலை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் 

வடமாகாண சபைக்கு மாற்றம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வடமாகாண மனிதவள முகாமைத்துவ பயிற்சி நெறியின் பிரதி பிரதம செயலாளராக 

கடமையாற்றிய உமாமகேஸ்வரன் கல்வி நிர்வாக பண்பாட்டு அலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் 

குறித்த வெற்றிடத்திற்கு சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு