அரச நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டம்! அமைச்சரவை பேச்சாளர் இன்று விடுத்த அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
அரச நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டம்! அமைச்சரவை பேச்சாளர் இன்று விடுத்த அறிவிப்பு...

நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவாத்தன கூறியுள்ளார். 

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், 

சிறப்பான முறையில் கடமையாற்றாத ஊழியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வு பெறும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலை இந்த நாட்களில் செய்யப்படுகிறது.

திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் ஒவ்வொரு அமைச்சின் செலவினங்களைக் குறைப்பதற்கான 

சுற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு