பதவி விலகாவிட்டால் கழுத்தறுத்து கொல்லப்படுவாய்! தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்…

ஆசிரியர் - Editor I
பதவி விலகாவிட்டால் கழுத்தறுத்து கொல்லப்படுவாய்! தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொகமட்டுக்கு சமுக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திற்கு (கபே) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு கருத்து தெரிவிக்கும் போது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீம் இதனை தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருக்கு வட்ஸ்அப் ஊடாக தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகாவிடில் 

அவரை கழுத்தறுத்து  கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்து அச்சுறுத்துவதாக தெரிவித்து இன்றைய தினம் கபே அமைப்புக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு