புதிய சாதனை படைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்

ஆசிரியர் - Editor II
புதிய சாதனை படைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்

இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த  முதல் ரி-20  போட்டியில் நியூசிலாந்து 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்த அணியின் வெற்றிக்காக போராடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி வீரர்கள் யாரும் படைத்திடாத தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். 

வாஷிங்டன் சுந்தர் 4 பந்துப் பரிமாற்றங்களில் 22 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

அதை விட இப்போட்டியில் மொத்தமாக 2 விக்கெட், 1 கேட்ச், 50 ஓட்டங்கள் எடுத்து சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய அவர் சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தது 50 ஓட்டங்கள், 1 விக்கெட், 1 படையெடுப்பு செய்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன் யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வேறு எந்த இந்திய வீரரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு