இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து வடகிழக்கில் போராட்டம்! ஆதரவு திட்டும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து வடகிழக்கில் போராட்டம்! ஆதரவு திட்டும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்..

இலங்கையின் சுதந்திர தினமாக எதிர்வரும் 4ம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு வரை போராட்டம் இடம்பெறவுள்ளது.  

இந்நிலையில் அண்மையில் யாழ்.மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களும் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மதகுருமார்,

சிவில் அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரை சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கான அழைப்புக்களை கோரிய நிலையில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் 

மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு, 

அம்பாறை மாவட்டங்களில் மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான ஆதரவு கோரிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு