யாழ்.கல்லுண்டாயில் வீடு புகுந்து வாள்வெட்டு, மானிப்பாயை சேர்ந்த 22 வயதான ஒருவர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாயில் வீடு புகுந்து வாள்வெட்டு, மானிப்பாயை சேர்ந்த 22 வயதான ஒருவர் கைது...

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்லுண்டாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த முதலாம் திகதி அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு இருந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு