கைவிடப்பட்ட காணி ஒன்றில் சிசுவின் சடலம்! 15 வயதான சிறுமியும், டெங்கு கட்டுப்பாட்டு ஊழியரும் கைது..

ஆசிரியர் - Editor I
கைவிடப்பட்ட காணி ஒன்றில் சிசுவின் சடலம்! 15 வயதான சிறுமியும், டெங்கு கட்டுப்பாட்டு ஊழியரும் கைது..

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத காணி ஒன்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் 15 வயதான சிறுமி ஒருவரும், குறித்த சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் நபர் ஒருவர் அந்த பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற நிலையில் புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டை சோதனை நடவடிக்கையின் போது சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி அவரை கர்ப்பமாக்கியுள்ளார். 

கர்ப்பமாடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில் சம்பவதினமான நேற்று காலை 9 மணியளவில் சிறுமி தனது வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளதையடுத்து பிறந்த சிசுவை சிறுமியின் வீட்டின் முன்னாள் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக விசரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து குறித்த சிறுமியையும் சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலமாக மீட்க்கப்பட்ட சிசுவை 

பிரேத பரிசோதனைக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு