17 வயது மாணவியை ஒரு இலட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த முதியவர்!! -பொலிஸார் செய்த அதிரடி செயல்-

ஆசிரியர் - Editor II
17 வயது மாணவியை ஒரு இலட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த முதியவர்!! -பொலிஸார் செய்த அதிரடி செயல்-

இந்தியாவின் - மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை ஒரே இலட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரோலி பார்க்சைட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பாடசாலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை என்று அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தார்.

 குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேடுதல் நடத்திய பொலிஸார், மாணவியின் கைபேசியின் சிக்னல் கடைசியாக விடுப்பட்ட தாதர் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த மாணவி தம்பதி ஒருவருடன் ஹூப்ளிக்கு செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

பின் விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், தம்பதி இருவரும் மீரஜ் ரயில் நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து இரு சக்கர வாகனம் ஒன்றில் அங்கிருந்து சென்றதையும் கண்டுபிடித்தனர்.

குறித்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், மாணவியுடன் சென்ற பெண் சுதா மனோஜ் ஜோஷி என்பவரின் மனைவி மற்றும் மாமா என்பது உறுதி செய்யப்பட்டது.

இருவரையும் தீவிரமாக கண்காணித்த பொலிஸாருக்கு, இறுதியாக அவுரங்காபாத்தில் உள்ள சிந்தி காலனியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், மாணவி மீட்கப்பட்டதோடு ஆள் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கடத்தப்பட்ட 17 வயது பெண் அவுரங்காபாத்தை சேர்ந்த கண்பத் காம்ப்ளே (50 வயது) என்பவருக்கு ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு