அபர்ணா முரளியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சட்ட கல்லூரி மாணவர்

ஆசிரியர் - Editor II
அபர்ணா முரளியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சட்ட கல்லூரி மாணவர்

தமிழில் மட்டுமல்லாது மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அபர்ணா பாலமுரளி சூர்யாவுடன் இணைந்து நடித்த சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தற்போது மலையாளத்தில் தங்கம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். 

இந்நிலையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் படத்தை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் படத்தின் அறிமுக விழா நேற்று புதன்கிழமை நடந்தது. 

இதில் படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் அபர்ணா பாலமுரளியும் பங்கேற்றார். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அக்கல்லூரியைச் சார்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து வழங்கினார். அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அபர்ணா, மாணவருடன் கைகுலுக்கி கொண்டார்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவர் அபர்ணாவின் தோள் மீது கையைப் போட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட அபர்ணா, அவர் கையிலிருந்து வேகமாக நழுவினார். 

ஆனாலும் விடாமல் அபர்ணாவை பிடித்து இழுக்கும் விதமாக மாணவர் தகாத முறையில் நடந்துகொண்டார். அருகில் இருந்த தயாரிப்பாளர், ஹீரோ வினித் ஆகியோர் சத்தம் போட்டு மாணவரை கட்டுப்படுத்தினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு