யாழ்.இருபாலை பகுதியில் வாளை கழுத்தில் வைத்து மிரட்டி! மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.இருபாலை பகுதியில் வாளை கழுத்தில் வைத்து மிரட்டி! மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பல்...

யாழ்.இருபாலை பகுதியில் வாளை காட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றிருந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு 9 மணியளவில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் செல்லப்பட்டது.

இருபாலை டச்சு வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் வீதியின் குறுக்கே நின்று வீதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து 

வாளை கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பில்  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு