பிறந்து 11 மாதங்களேயான சிசுவை துஷ்பிரயோகம் செய்த தாய் வழி உறவினர்! கோப்பாய் பொலிஸ் பிரிவில் சம்பவம், விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
பிறந்து 11 மாதங்களேயான சிசுவை துஷ்பிரயோகம் செய்த தாய் வழி உறவினர்! கோப்பாய் பொலிஸ் பிரிவில் சம்பவம், விசாரணை ஆரம்பம்..

பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாகது, குழந்தையின் பிறப்புறுப்பு சிவந்து, வீக்கமடைந்திருந்ததால் நோய் தொற்கு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 

பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குழந்தையின் தாய்வழி உறவினர் ஒருவரே துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என பெற்றோர் தரப்பில் கூறியுள்ளதாக அறியமுடிகின்றது. இதனடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 

கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு