தறிகெட்ட ஓட்டம்! பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளான இ.போ.ச பேருந்து, 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
தறிகெட்ட ஓட்டம்! பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளான இ.போ.ச பேருந்து, 3 பேர் படுகாயம்..

மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் ஊறணி பகுதியில் இ.போ.ச பேருந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணத்தை மேற்கொண்ட பஸ்வண்டி இன்று (ஜன 13) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 

மட்டு ஊறணி சந்திக்கு அருகில் வேககக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு