கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டம்!! -இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா-

ஆசிரியர் - Editor II
கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டம்!! -இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா-

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஸ்கா பெர்னாண்டே 20 ஓட்டங்களுடன் வெளியேறிய நிலையில், நுவனிது பெர்னாண்டோ - குஷால் மெண்டிஸ் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தது. 

அணியின் ஓட்ட 102 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. மெண்டிஸ் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த தனஞ்செயா டக் அவுட் ஆனார். 

நுவனிது பெர்னாண்டோ அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, இலங்கை அணி 215 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து.

இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக பிரகாசிக்க தவறி அடுத்தடுத்து விக்கட்டுக்களை பறி கொடுத்தனர்.

இருப்பினும் அணியை தாங்கும் தூணாக களத்தில் நின்ற கே.எல் ராகுல் 64 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்படி 43.2 பந்துப்பரிமாற்றங்களில் இந்திய அணி 6 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரையும் கைப்பற்றியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு