யாழ்.தேர்தல் மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியது!

ஆசிரியர் - Editor I
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியது!

யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தி இன்று செலுத்தியுள்ளது. 

இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

வலிவடக்கு பிரதேச சபை, வலிமேற்கு பிரதேச சபை, யாழ்.மாநகரசபை, சாவகச்சேரி நகரசபை, காரைநகர் பிரதேச சபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு இதன்போது தேசிய மக்கள் சக்தியால் கட்டு பணம் செலுத்தப்பட்டது.

முதலாவது அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மேலும் சில சுயேச்சைக்குழுக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சில பிரதேச சபைகளுக்காக இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு