யாழ்.திருநெல்வேலியில் விபத்து! ஓய்வூதிய பணத்தை எடுக்க வங்கிக்கு வந்த முதியவர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் விபத்து! ஓய்வூதிய பணத்தை எடுக்க வங்கிக்கு வந்த முதியவர் உயிரிழப்பு..

ஓய்வூதிய பணத்தினை பெறுவதற்காக வங்கிக்கு சென்றிருந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் யாழ்.திருநெல்வேலி - பலாலி வீதியில் இடம்பெற்றுள்ளது. 

கோண்டாவில் வடக்கை சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலி பகுதியில் உள்ள மக்கள் வங்கி கிளையில் ஓய்வூதிய பணத்தினை எடுக்க சென்றவேளை, 

வங்கியின் முன்பாக பலாலி வீதியை கடந்தபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். 

அவரை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

எனினும் வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு