குழந்தையை வலுக்கட்டாயமாக கஞ்சா புகைக்க வைத்த கொடூரம்!! -சம்மந்தப்பட்டவருக்கு பொலிஸ் வலைவீச்சு-

ஆசிரியர் - Editor II
குழந்தையை வலுக்கட்டாயமாக கஞ்சா புகைக்க வைத்த கொடூரம்!! -சம்மந்தப்பட்டவருக்கு பொலிஸ் வலைவீச்சு-

நைஜிரியா நாட்டில் பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டை வைத்து வலுக்கட்டாயமாக புகைக்கவைத்த நபரை தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர். தேடிவருகின்றனர்.

தற்போது இணையத்தளங்களில் வைரலாகிவரும் வீடியோவில்;-

அந்நாட்டை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, கஞ்சாவை புகைக்கிறார். 

ஒவ்வொரு முறை அவர் புகைத்த பின், அந்த சுருட்டை குழந்தையின் வாயில் வலுக்கட்டாயமாக திணிக்கிறார். அது என்னவென்றே அறியாத அந்த பச்சிளம் குழந்தை, அதன் வாயில் வைத்ததும் சுருட்டை புகைக்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த நபரின் அருவருக்கத்தக்க செயலால் ஆத்திரமடைந்த நைஜீரியர்கள் ட்விட்டரில் கொந்தளித்து, குறித்த நபரை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி பொலிஸாரும் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். வீடியோவில் காணப்படும் அந்த நபரைக் கண்காணிக்கவும், அவரைத் தண்டிக்கவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு