யாழ்.கல்வியங்காடு, மடத்தடி, இருபாலை பகுதிகளில் நீண்டகாலமாக கைவரிசை காட்டிவந்த ஆசாமியை மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு, மடத்தடி, இருபாலை பகுதிகளில் நீண்டகாலமாக கைவரிசை காட்டிவந்த ஆசாமியை மடக்கியது பொலிஸ்..

யாழ்.கல்வியங்காடு - மடத்தடி மற்றும் இருபாலை பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளை திருடிவந்த ஆசாமியை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இருபாலை பகுதியில் திருடிய மாடு ஒன்றினை விற்பனை செய்ய முயன்றபோது மாட்டு உரிமையாளரால் திருடப்பட்ட மாடு இனங்காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் கல்வியங் காட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனவும் குறித்த நபர் நீண்ட காலமாக மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு