யாழ்.இருபாலையில் வீடு புகுந்து கணவன், மனைவி மீது வாள்வெட்டு! தலைமறைவாகியிருந்த ரவுடி வலைப்பாட்டில் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.இருபாலையில் வீடு புகுந்து கணவன், மனைவி மீது வாள்வெட்டு! தலைமறைவாகியிருந்த ரவுடி வலைப்பாட்டில் கைது..

யாழ்.இருபாலை - மடத்தடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கணவன், மனைவியை வெட்டி காயப்படுத்திய நபர் 10 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் இருபாலை மடத்தடி பகுதியில் வீடு புகுந்து வீட்டில் இருந்த கணவன் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தார். எனினும் குறித்த நபர் பின்னர் தலைமறைவான நிலையில், 

கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில் வைத்து சந்தேகநபரை நேற்று கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் சந்தேகநபரின் வீட்டிலிருந்த கோழி கூட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு