வர்த்தக நிலையத்தை உடைத்து 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வர்த்தகர் வளர்த்த கால்நடைகள் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
வர்த்தக நிலையத்தை உடைத்து 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வர்த்தகர் வளர்த்த கால்நடைகள் கொள்ளை!

கிளிநொச்சி - கல்லாறு கிராமத்திலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு மூன்று லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

மேலும் வாழ்வாதாரத்திற்காக வழக்கப்பட்ட கோழி மற்றும் ஒரு ஆடும்  திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நேற்றுமுன்தினம் 9ம் திகதி இரவு 9 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிந்தவேளை 

உரிமையாளர் அயலில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சென்றிருந்ததை அவதானித்தவர்கள், கடையை உடைத்து திருடியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடை உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த கடை உரிமையாளர் 

 சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி தடையவியல் பொலிஸார் மற்றும் தருமபுரம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு