யாழ்.பருத்தித்துறை - மந்திகை விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - மந்திகை விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!

யாழ்.பருத்தித்துறை - மந்திகை சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

புலோலி தெற்கை சேர்ந்த இராசு புவனேஸ்வரன் (வயது- 37) என்பவரே உயிரிழந்தார். தனது வீட்டில் இருந்து இரவு வேலைக்காக இரவு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு 

வீட்டிலிருந்து வேலைத்தளத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அதன்போது, மந்திகை சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்த்தர் உடனடியாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றமுன்தினம் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு