வடமாகாணத்தில் களமிறங்கும் கருணா அம்மான் - பிள்ளையான்..! கப்பல் - படகு சின்னங்களில் தனித்தனியாக போட்டி..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் களமிறங்கும் கருணா அம்மான் - பிள்ளையான்..! கப்பல் - படகு சின்னங்களில் தனித்தனியாக போட்டி..

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் வடமாகாணதிலும் தனித்தனியே போட்டியில் களமிறங்கவுள்ளனர். 

விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையாகக் கொண்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கப்பல் சின்னத்திலும் 

சிவனேச துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையாகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகுச் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.

அதே நேரம் சில பகுதிகளில் கருணா அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணா தலைமையில் 

சுயேச்சை குழுவாகவும் களமிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு