யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி திறந்துவைக்கவுள்ளதுடன், இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். 

75வது சுதந்திர தின முன்னேற்பாடுகள தொடர்பான கலந்தாய்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் இதனை தொிவித்துள்ளார். 

இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பெப்ரவரி மாதம் 11 ம் திகதிஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

அது தொடர்பான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மேலும் கலாச்சார மத்திய நிலையத்தினையும் ஜனாதிபதி அன்றைய தினம் திறந்து வைத்து மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் அன்றைய தினம் அரம்பித்துவைப்பார் என தொிவித்தார். 

இன்றைய  கூட்டத்தில் முப்படைகளின் பிரதிநிதிகள் துறை சார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு