அரசுக்கு 7 நாட்கள் மட்டும் கால அவகாசம்! தமிழ் கட்சிகள் கிடுக்குப்பிடி, அரசாங்கத்துடனான பேச்சுக்கள் இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
அரசுக்கு 7 நாட்கள் மட்டும் கால அவகாசம்! தமிழ் கட்சிகள் கிடுக்குப்பிடி, அரசாங்கத்துடனான பேச்சுக்கள் இன்று ஆரம்பம்..

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை 7 நாட்களில் முழுமையாக நடைமுறைப்படுத்வேண்டும். அந்த 7 நாட்களுக்குள் அதனை செய்யாதவிடத்து அரசுடன் பேசுவதில்லை. எனவும் தமிழ் கட்சிகள் கூட்டாக தீர்மானம் எடுத்திருக்கின்றனர். 

இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (09) மாலை கூடிய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன், கே.எம்.சிவாஜிலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

இன்று 10ஆம் திகதி அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்பினருக்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், கலந்துரையாடலின்போது முன்வைக்கப்படவேண்டிய விடயங்களை ஆராய நேற்று தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, அரசியலமைப்புக்கு அமைவாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதிக்குள் அல்லது ஒரு வாரத்திற்குள் மாகாண அதிகாரங்கள் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தின் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ முழுமையாக மீளளிக்கப்பட வேண்டும்.ஏ

ற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒரு வாரத்திற்குள் மீளளிக்கவில்லையெனில் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தீர்வை தருமென்பது பகல் கனவாகவே அமையும் என்ற அடிப்படையில், அரசாங்கத்துடனான பேச்சை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பை தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த கூட்டம் இன்று காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு