போதைக்கு அடிமையான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 21 வயது இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! யாழ்.பொன்னாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
போதைக்கு அடிமையான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 21 வயது இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! யாழ்.பொன்னாலையில் சம்பவம்..

போதைக்கு அடிமையான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் தனது 21வது பிறந்த நாளன்று காணாமல்போன நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் யாழ்.பொன்னாலை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 5 மாதங்களாக பொன்னாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் தனது 21வது பிறந்ததினமான நேற்றுமுன்தினம் இரவே அவர் காணாமல் போயுள்ளார். 

அதனையடுத்து உறவினர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே அவர் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார். அவரது காலணி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கிணற்றுக்கு வெளியே இருந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரான 21 வயது கிருஷ்ணமோகன் கிருசாந்தன், பல மாதங்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

குறித்த இளைஞரது மரணம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பபட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு