யாழ்.பொற்பதி வீதியில் உள்ள பழைய “மாத்தையா பேஸ்” காணியில் இடம்பெற்ற அகழ்வு பணிகள் நிறுத்தம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொற்பதி வீதியில் உள்ள பழைய “மாத்தையா பேஸ்” காணியில் இடம்பெற்ற அகழ்வு பணிகள் நிறுத்தம்!

யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி இடம்பெற்ற அகழ்வு பணிகளில் ஒன்றும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணி கைவிடப்பட்டுள்ளது. 

பொற்பதி வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை(09) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், 

ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை. அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த 

மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு