விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் யாழ்.பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் யாழ்.பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்..

யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகததில் இன்று காலை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

காலை 10 மணியளவில் யாழ்.நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், 

ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு