5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன்!! -பாடசாலையில் நடந்த கொடுமை-

ஆசிரியர் - Editor II
5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன்!! -பாடசாலையில் நடந்த கொடுமை-

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள பாடசாலை வளாகத்தில் 5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை பிற்பகல் நடந்த இச் சம்பவ தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;-

குறித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சிறுவன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார், ஆனால் சிறுமி வீட்டுக்கு சென்று உடனடியாக தனது பெற்றோருக்கு நடந்ததை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு