“கெத்து பசங்க” வட்ஸ்அப் குழு தொடர்பான தகவலையடுத்து விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு! 4 வாள்வெட்டு குழு ரவுடிகள் கைது..

ஆசிரியர் - Editor I
“கெத்து பசங்க” வட்ஸ்அப் குழு தொடர்பான தகவலையடுத்து விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு! 4 வாள்வெட்டு குழு ரவுடிகள் கைது..

வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களால் இயக்கப்பட்ட “கெத்து பசங்க” வட்ஸ்அப் குழுவை சேர்ந்த 4 பேர் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 5ஆம் திகதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கிடைத்த தகவலின்படி, பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் 

'கெத்து பசங்க' என்ற வட்ஸ்அப் குழு தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் நால்வரை 4 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் கைதுசெய்து, 

மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு