மன்னாரை சேர்ந்தவருக்கு லொத்தரில் அடித்த அதிஷ்டம்! மூன்றரை கோடியாம்...

ஆசிரியர் - Editor I
மன்னாரை சேர்ந்தவருக்கு லொத்தரில் அடித்த அதிஷ்டம்! மூன்றரை கோடியாம்...

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர் கௌரவ ஜீவன் தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது. 

வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் திரு.குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி தவகோகுலன், 

கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி பிரதீபன் ஆகியோரின் முன்னிலையில் மன்னார் மாவட்டத்தில் சனிதா ரிக்கட்டின்மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு மாபெரும் சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா காசோலை. 

மற்றும் பளைபிரதேசத்தில் வலம்புரி அதிஷ்ட ரிக்கற்மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு 20 இலட்சம் காசோலை மற்றும் சங்கானை, யாழ்பாணம், சாவகச்சேரி, வவுனியா மன்னார் 

பிரதேசங்களில் சனிதா, அதோடிபதி, கப்ருக்க அதிஷ்ட ரிக்கறூடாக வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் காசோலைகளும் கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராசாவால் வழங்கப்பட்டது.   இந்நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு