யாழ்.பண்ணை பகுதியில் ஜெலி மீன் தாக்கியதில் திடீர் சுகயீனமடைந்த மீனவர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை பகுதியில் ஜெலி மீன் தாக்கியதில் திடீர் சுகயீனமடைந்த மீனவர் உயிரிழப்பு!

ஜெலி மீன் தாக்குதலுக்கு இலக்காகி திடீர் சுகயீனமடைந்த யாழ்.குருநகர் மீனவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மீனவர் உயிாழந்துள்ளார். 

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் எனும் 52 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி பண்ணை பகுதியில் இறால் பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

அதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றுவந்ததன் பின்னர், வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

இருப்பினும், அவர் மீனின் தாக்குதலால் ஏற்பட்ட சுகவீனத்திலிருந்து பூரணமாக குணமடையவில்லை. 

அதன் பின்னர் வீட்டில் ஓய்வெடுத்துவந்த போதிலும், அவ்வப்போது திடீர் சுகவீனமுற்று அவதிப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் திடீர் சுகவீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு