ஒரு போட்டியில் 7 முறையற்ற பந்துவீச்சு!! -மோசமான சாதனை படைத்த இந்திய அணி-

ஆசிரியர் - Editor II
ஒரு போட்டியில் 7 முறையற்ற பந்துவீச்சு!! -மோசமான சாதனை படைத்த இந்திய அணி-

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2 ஆவது போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சர்வதேச ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

இதுவரை சர்வதேச ரி-20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 முறையற்ற பந்துகளை வீசி அதிக முறையற்ற பந்துகளை வீசிய அணியாக அயர்லாந்து முதலிடத்தில் இருந்தது. 

ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 முறையற்ற பந்துகளை வீசி ஒரே போட்டியில் அதிக முறையற்ற பந்துகளை வீசிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு