யாழ்.கோப்பாயில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பெண் ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பெண் ஒருவர் காயம்..

யாழ்.கோப்பாய் - கிருஷ்ணன் கோவிலடி பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் உரும்பிராய் – நல்லூர் இராச பாதை இரண்டும் சந்திக்கும் பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆபத்தான சந்தியாகத் திகழும் குறித்த சந்திப் பகுதியில் விபத்துச் சம்பங்கள் பல நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு