விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor I
விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் உயிரிழப்பு...

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அரச ஊழியர் உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய யோகச்சந்திரன் பிரகலதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சையிக்கிளில் கடந்த 2ம் திகதி ஆசிரியையான தனது மனைவியை பாடசாலையில் இறக்கிவிட்டு திரும்பிவரும் வழியில் 

இன்னுமொரு மோட்டார் சையிக்கிளுடன் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 

நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு