யாழ்.கோப்பாய் பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் கொள்ளை..! நள்ளிரவில் கொள்ளை கும்பல் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் கொள்ளை..! நள்ளிரவில் கொள்ளை கும்பல் அட்டகாசம்..

யாழ்.கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். 

நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தோரை கத்தி முனையில், மிரட்டி 10 பவுண் தங்க நகைகள், 

ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு