யாழ்.வரணி - கரம்பைக்குறிச்சியில் பாடசாலை நுழைவாயிலை மூடி பொதுமக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வரணி - கரம்பைக்குறிச்சியில் பாடசாலை நுழைவாயிலை மூடி பொதுமக்கள் போராட்டம்..

யாழ்.வரணி - கரம்பைக் குறிச்சி அமொிக்கமிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்தை எதிர்த்து பெற்றோர் இன்று காலை பாடசாலை நுழைவாயிலை மூடி போராட்டம் நடத்தியிருக்கின்றனர். 

இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்தனர். 

குறித்த பாடசாலை அதிபர் ஏழு வருட நியமனத்தில் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் மூன்று வருடத்தில் திடீரென அதிபரை இடமாற்றுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திடீர் இடமாற்றத்திற்கான காரணத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என நேற்றைய தினம் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தினை ஈடுபட்டனர். 

அதிபர் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி பெற்றோர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கையும் செய்யவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு