நாய்கள் இழுத்துச் சென்ற நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு! யாழ்.வடமராட்சி கிழக்கில் கோர சம்பவம்...

ஆசிரியர் - Editor I
நாய்கள் இழுத்துச் சென்ற நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு! யாழ்.வடமராட்சி கிழக்கில் கோர சம்பவம்...

யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியில் வீதியில் கிடந்து பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. 

மருதங்கேணி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பில் 34 வயதான பெண்ணொருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது,

பிறந்து ஓரிரு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிசாருக்கு அறிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு