5 தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு படுகொலை நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில்...

ஆசிரியர் - Editor I
5 தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு படுகொலை நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில்...

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 17ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. 

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றிருக்கின்றது. 

இதன்போது ஐந்து மாணவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை 

திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்த ஜந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு 

காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ் இனப் படுகொலை உட்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான குற்றவாளிகளை

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியைப் பெறத் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசிய இனம் தனக்கே உரித்தான சுய நிர்ணய உரிமையின்அடிப்படையில் சுதந்திரமா? சுயாட்சியா? 

என்ற பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன் வருமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு