யாழ்.கல்லுண்டாயில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாயில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 34 வயதான ஒருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குறித்த நபரின் மீது, 

நேற்றைய தினம் இரவு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேருக்கு மேற்பட்ட வன்முறை கும்பல் வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த நபரை அயலவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு