யாழ்.சுழிபுரம் - பாண்டவெட்டையில் தேவாலயத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரம் - பாண்டவெட்டையில் தேவாலயத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

யாழ்.சுழிபுரம் - பாண்டவெட்டை பகுதியிருந்து தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

இதன்போது பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் பேருந்தின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 

அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்ததால், அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவியது. 

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு