அமைச்சர் டக்ளஸ் - யாழ்.மாவட்ட கட்டளை தளபதி இடையே சந்திப்பு! வாள்வெட்டு, போதைப் பாவனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து ஆய்வு...

ஆசிரியர் - Editor I
அமைச்சர் டக்ளஸ் - யாழ்.மாவட்ட கட்டளை தளபதி இடையே சந்திப்பு! வாள்வெட்டு, போதைப் பாவனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து ஆய்வு...

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சனிக்கிழமை (டிச. 31) சந்தித்து கலந்துரையாடினார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், 

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மாடுகள் திருட்டு, போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடுவித்தல் பற்றியும் பாடசாலை மைதானம் போன்ற பொது இடங்களை புனரமைப்பதற்கு 

இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு