இடமாற்றம் பெற்றுச் செல்லும் வடமாகாண விசேட அதிரடிப்படை தலைமை அதிகாரிக்கு கெளரவிப்பும்..

ஆசிரியர் - Editor I
இடமாற்றம் பெற்றுச் செல்லும் வடமாகாண விசேட அதிரடிப்படை தலைமை அதிகாரிக்கு கெளரவிப்பும்..

வடமாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி டி.டி.டி.கே.ஹெட்டியாராச்சி இடமாற்றம்பெற்றுச் செல்லும் நிலையில் அவருக்கான பிரிவுபசார நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கட்டுப்பாட்டு பிரதிநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை யாழ்.கலட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வடமாகாண கட்டளை அதிகாரி டி.டி.டி.கே.ஹெட்டியாராச்சி பொன்னாடை போர்தி, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.


இந் நிகழ்வில் குளோபல் அசோசியேசன் ஐரோப்பாவுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதனின் அன்பளிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தலா 25,000 ரூபாய் காசோலைகள் இரண்டும், வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பத்தில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் காசோலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராஜா, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு