யாழ்.நல்லுார் - கோவில் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்குள் நுழைந்து இளைஞன் மீது வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் - கோவில் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்குள் நுழைந்து இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்.நல்லுார் - கோவில் வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வன்முறை கும்பல் விடுதியில் நின்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. 

சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை(29) இரவு 7.30 மணியளவில் 

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.காயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. 

வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு