நுழைவு சிட்டைக்கு அறவிடப்படும் பணம் அதிகம்தான்! சீன துாதுவரே கலங்கினார்..

ஆசிரியர் - Editor I
நுழைவு சிட்டைக்கு அறவிடப்படும் பணம் அதிகம்தான்! சீன துாதுவரே கலங்கினார்..

யாழ்.கோட்டையின் நுழைவுச்சீட்டை விலை ஒப்பீட்டளவில் அதிகம் என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை வாங்கியதாக தெரிவித்தார்.

மேலும் கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள் ஒன்றை பார்த்தேன். இதன் மூலம் சீனாவுடனான தொடர்பு பழமையானது என்றார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் புதன்கிழமை விஜயம் செய்து பார்வையிட்டனர்.

கோட்டையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 20 ரூபாய் பணமும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 4 அமெரிக்க டொலர் பணமும் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு