தவறான உறவால் பல வாய்ப்புகளை இழந்தேன்!! -கவலை தெரிவிக்கும் அஞ்சலி-

ஆசிரியர் - Editor II
தவறான உறவால் பல வாய்ப்புகளை இழந்தேன்!! -கவலை தெரிவிக்கும் அஞ்சலி-

தமிழ் சினிமாவில் அஞ்சலி பாப்பா என்று அழைக்கப்படும் நடிகை அஞ்சலி, தான் தவறான உறவில் இருந்ததாக தெரிவித்து பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்.

அஞ்சலி 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தனக்கு நண்பராக அறிமுகமான ஜெய்யுடன் 'எனக்கு வாய்த்த அடிமைகள்', 'பலூன்' போன்ற படங்களில் தொடர்ந்து நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான சில புகைப்படங்களையும் இருவரும் வெளியிட்ட நிலையில், பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது. 

இதன் பின் பட வாய்ப்புக்களை தவிர்த்து வந்தார் அஞ்சலி. இதற்க்கு காரணம் தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பது தான் என சில கிசுகிசு எழுந்த நிலையில், தற்போது முதல் முறையாக. டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து ஊடகம் ஒன்றிக்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு நபருடன் ஏற்பட்ட புழக்கத்தால் தன்னுடைய எதிர்காலத்தை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னுடைய எதிர்காலத்துக்கு தடையாக இருந்த உறவை விட, எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும், நடிகை அஞ்சலி கூறியுள்ளார். அந்த நபர் யார் என்பதை அஞ்சலி கூற மறுத்துவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு