சீன மக்களால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் இன்று மக்களிடம் கையளிப்பு..!

ஆசிரியர் - Editor I
சீன மக்களால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் இன்று மக்களிடம் கையளிப்பு..!

சீன மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் இன்று யாழ்.மாவட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த நிகழ்வு இன்று(29) காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் 

சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 

100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், 

வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க(காணி) அதிபர் முரளிதரன் 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கே.பாலகிருஸ்ணன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள்

 உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு